முச்சக்கரவண்டியுடன் தீ வைத்து எரித்து கொலை .

tubetamil
0

 நபரொருவர் முச்சக்கரவண்டியுடன் தீ வைத்து எரித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக கஹவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.

இரத்தினபுரி மாவட்டம் கஹவத்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரக்வானை, ஹொரமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த கொலை சம்பவம் நேற்று (29) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

கொலைசெய்யப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். எரிக்கபப்ட்டவரின் சடலமானது அடையாளம் காண முடியாத அளவிற்கு தீயில் கருகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முச்சக்கரவண்டியும் முற்றாக தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இது தொடர்பில் கஹவத்தை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில், முச்சக்கரவண்டியுடன் தீ வைத்து எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top