பல மில்லியன் சட்டவிரோத சொத்துக்களை குவித்த முன்னாள் அமைச்சர் .

tubetamil
0

 800 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான சொத்துக்களை சட்டவிரோதமாக வைத்திருந்ததாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக கொழும்பு மேல்நீதிமன்றம் குற்றம் சாட்டியுள்ளது.

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


இதன்போது, கொழும்பு மேல்நீதிமன்ற நீதவான் ஆதித்யா படபெண்டிகே முன்னிலையில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து குற்றம்சாட்டப்பட்டவரை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு மேல்நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top