யாழில் நாய் ஒன்றுக்கு 600 ரூபாய்: விமர்சனத்திற்குள்ளான மாநகரசபை புதிய திட்டம்

Author
0

 வட மாகாண ஆளுநரின் விசேட திட்டத்தின் கீழ் நல்லூர் மற்றும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைகளால் முன்னெடுக்கப்படும் பெண் நாய்களுக்கு கருத்தடை செய்யும் நடவடிக்கையானது மக்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் மத்தில் பாரிய விமர்சனத்துக்கு உள்ளானது.

நாய்களினால் ஏற்படும் விபத்துக்கள் மற்றும் தொற்று நோய்களை கருத்தில் கொண்டு நாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்குடன் பெண் நாய்களுக்கான கருத்தடை செயற்றிட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அந்தவகையில், ஒரு நாயை பிடித்து கொடுப்பவர்களுக்கு 600 ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்பு மக்கள் மத்தியில் பெரும் பேசு பொருளானதுடன் இது நடைமுறைக்கு எவ்வளவு தூரம் சாத்தியம் என்ற கேள்வியையும் எழுப்பி உள்ளது.


குறித்த விவகாரம் தொடர்பான பல விளக்கங்களை உள்ளடக்கி வருகிறது இன்றைய முப்பரிமாணம் நிகழ்ச்சி....

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top