கொழும்பிலிருந்து மட்டக்களப்பு சென்ற சொகுசு பேருந்து கோர விபத்து; மூவருக்கு நேர்ந்த கதி!

Editor
0

 மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் காத்தான்குடி பிரதேசத்தில் இன்று (21) அதிகாலை இடம்பெற்ற பாரிய விபத்து சம்பவத்தில் மூவர் படுகாயம் அடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.


அதிகாலை 4 மணியளவில் கொழும்பிலிருந்து கல்முனை நோக்கி வந்து கொண்டிருந்த லொறியொன்று காத்தான்குடி பிரதான வீதியில் நிறுத்தப்பட்டிருந்த அதே நேரம் கொழும்பிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி வந்து கொண்டிருந்த சொகுசு பஸ் ஒன்று குறித்த லொறியின் பின்னால் மோதியதன் காரணமாக பாரிய விபத்து சம்பவம் ஏற்பட்டுள்ளது.




மேலதிக விசாரணை

குறித்து விபத்தை தொடர்ந்து பிரதான வீதியில் வந்து கொண்டிருந்த முச்சக்கர வண்டி பஸ் மீது மோதியுள்ளது இதனால் பஸ்ஸில் நடத்துனர் படுகாயமடைந்தார்.


அதே நேரம் பஸ்ஸின் சாரதி முச்சக்கர வண்டியின் சாரதி ஆகியோர் காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


  பஸ்ஸின் அதிக வேகமே விபத்துக்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.மற்றும் சொகுசு பஸ் ஆட்டோ என்பது பெரிதும் சேதம் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.  


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top