கொழும்பிலிருந்து துரத்தப்பட்ட மகிந்த - பின்னணியில் அரங்கேறும் நாடகங்கள்

Editor
0

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு பொதுமக்களின் அனுதாபத்தை பெறுவதற்காக நாடகங்கள் நடத்தப்படுகின்றன என்று தொழில்துறை அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய போதே தொழில்துறை அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

அவர் மேலும் உரையாற்றுகையில் பொதுஜன பெரமுன மற்றும் ராஜபக்சக்கள் தங்கள் அதிகாரப்பூர்வ இல்லத்தை காலி செய்ய வேண்டிய நிலையில் அவர்கள் எங்கும் செல்ல முடியாது என்று கூறி அனுதாபத்தைப் பெற முயற்சிக்கிறார்கள் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் உரிமை இரத்து யோசனையை நிறைவேற்றிய பிறகு நாடு சரியான பாதையில் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இந்தச் சட்டத்தை அங்கீகரிப்பதன் மூலம் அரசாங்கம் அதன் வாக்குறுதியைக் காப்பாற்றியுள்ளது என்று அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top