அதிகாலையில் கோர விபத்து - ஒருவர் பலி - 6 பேர் படுகாயம்!!

Editor
0

 மொனராகல தனமல்வில-வெல்லவாய வீதியில் வேன் ஒன்று வீதியை விட்டு விலகி மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.

இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த விபத்தில் வேனின் சாரதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தனமல்விலவில் இருந்து வெல்லவாய நோக்கி பயணித்த வேனின் சாரதிக்கு ஏற்பட்ட தூக்க கலக்கம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பொலிஸார்  விசாரணை

காயமடைந்தவர்கள் ஹம்பாந்தோட்டை மற்றும் தனமல்வில மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


உயிரிழந்தவர் தம்புள்ளையை சேர்ந்த 56 வயதுடையவர். தனமல்வில பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top