யாழ்ப்பாணத்தில் சொகுசு பேருந்து மோதி மீன் வியாபாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அல்லைப்பிட்டியை சேர்ந்த மீன் வியாபாரி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை வீதியில், மோட்டார் சைக்கிளில் பயணித்த மீன் வியாபாரியை சுற்றுலா பயணிகளை ஏற்றி சென்ற சொகுசு பேருந்து மோதியதில் வியாபாரி சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார்.
பொலிஸார் விசாரணை
வியாபாரியின் சடலம், யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், ஊர்காவற்றுறை பொலிஸார் விபத்து தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
