நாட்டின் சில பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக, ஏழு மாவட்டங்களில் உள்ள பல பகுதிகளில் வசிப்பவர்களுக்கு முன்கூட்டியே மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு வெளியிட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை இன்று (16) மாலை 7:30 மணி வரை நடைமுறையில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எச்சரிக்கை
யின்படி, சில பகுதிகளில் வசிப்பவர்களுக்கு நிலை-1 (மஞ்சள்) எச்சரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது
எச்சரிக்கைகண்டி மாவட்டம்: உடுநுவர பிரதேச செயலகப் பிரிவு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்
மாத்தளை மாவட்டம்: பல்லேபொல மற்றும் அம்பன்கங்கா கோரலே பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்குருநேகல மாவட்டம்: ரிதீகம மற்றும் அலவ்வ பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்
கம்பஹா மாவட்டம்: அத்தனகல்ல பிரதேச செயலகப் பிரிவு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்
மொனராகலை மாவட்டம்: மெதகம பிரதேச செயலகப் பிரிவு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்
காலி மாவட்டம்: நெலுவ பிரதேச செயலகப் பிரிவு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் போன்றவற்றிற்கே மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேகாலை மாவட்டம்: யட்டியந்தோட்டை மற்றும் ரம்புக்கனை பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்