இலங்கையில் தொடரும் துயரம்; தூக்கி எறியப்படும் சிசுக்கள்!

Editor
0

  மாத்தளை, பிடகந்த தோட்டத்தில் உள்ள பழைய தேயிலைத் தொழிற்சாலைக்கு அருகிலுள்ள வடிகாணில், பிறந்த சிசு ஒன்று வீசப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


கந்தேனுவர பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சிசு மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட சிசு, மாத்தளை பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.






அநாதரவாக விடப்படும் சிசுக்கள் 


சிசுவின் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை. சம்பவம் கந்தேனுவர பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.


அதேவேளை கடந்த 2 ஆம் திகதி இப்லோகம, கொன்வேவா பகுதியில் தனது தாயாரால் கைவிடப்பட்ட ஒரு மாத பெண் குழந்தை ஒரு பையில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.


ஓய்வுபெற்ற குடும்ப சுகாதார அதிகாரி வீட்டின் முன் ஒரு நாற்காலியில் குழந்தை விடப்பட்டிருந்தது. மேலும் அம்ப்பாறை மாவட்டத்திலும் பதின்மவயது பெற்றோர் பெற்ற குழந்தையும் அநாதர்வான நிலையில் கண்டு பிடிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top