கரூர் துயரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு துணை நிற்பேன்: உறுதியளித்த விஜய்!!

Editor
0

 கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துடன் என்றும் துணை நிற்பதாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் உறுதியளித்துள்ளார்.


தமிழக வெற்றிக் கழக கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துடன் விஜய் காணொளி அழைப்பில் பேசி ஆறுதல் தெரிவித்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



இந்நிலையில், கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான தனுஷ்குமார் என்பவரின் குடும்பத்தினருடன் விஜய் நேற்று காணொளி அழைப்பில் உரையாடியுள்ளார்.


உயிரிழந்தவர்களின் குடும்பங்களை த.வெ.க தலைவர் விஜய் விரைவில் நேரில் சந்திக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல்

உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்து விஜய் அண்மையில் காணொளியொன்றையும் வெளியிட்டிருந்தார்.

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கடந்த 27 ஆம் திகதி கரூரில் பிரசாரத்தில் ஈடுபட்ட போது, திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.

காவல்துறைவழக்கு

இந்த சம்பவம் தற்போது தமிழ்நாட்டில் அரசியல் ரீதியாக பல சர்ச்சைகளையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் என். ஆனந்த், இணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.


இதேவேளை, கரூர் சம்பவம் தொடர்பில் கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top