இலங்கையில் இனி எவரும் தப்ப முடியாது....! நாடு முழுவதும் தீவிர கண்காணிப்பு!

Editor
0

 கொழும்பு உட்பட நாடு முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள நெடுஞ்சாலைகளிலும் வீதிகளிலும் பாதுகாப்பு கமரா அமைப்புகளை நிறுவுவதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.


இதற்குத் தேவையான கமராக்களின் எண்ணிக்கை மற்றும் அதற்கான செலவு குறித்து கலந்துரையாடப்பட்டு வருவதாக பொது பாதுகாப்பு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.


பாதாள உலக குற்றவாளிகள் உட்பட பல்வேறு சந்தேக நபர்களைப் பிடிக்க பாதுகாப்பு கமராக்கள் பெருமளவில் உதவியுள்ளன. மேலும் இந்த கமரா அமைப்பு பல சந்தேக நபர்களைப் பிடிப்பதை இலகுவாக்கியுள்ளதாக செய்தித் தொடர்பாளர் கூறினார்.


பாதுகாப்பு கமரா அமைப்பு

மாகாண மட்டத்தில் இந்த பாதுகாப்பு கமரா அமைப்பை செயல்படுத்துவது மற்றும் மேற்கு, வடமேற்கு மற்றும் வடக்கு மாகாணங்களை அடிப்படையாகக் கொண்டு அவற்றை செயல்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.




அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நாடு முழுவதும் இந்த கமரா அமைப்பை செயல்படுத்துவதே இதன் நோக்கமாகும்.




கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top