அதிகரிக்கப்படும் விசேட தேவையுடையோருக்கான அரச வேலைவாய்ப்பு!!

Editor
0

 விசேட தேவையுடையோருக்கான வேலைவாய்ப்பு ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் அரச துறையில் தற்போதுள்ள 3 சதவீத  இட ஒதுக்கீட்டை 4 சதவீதமாக அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக, தொழில் பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க அறிவித்துள்ளார்.



கொழும்பில் நடைபெற்ற விசேட தேவையுடையோருக்கான வேலைவாய்ப்பு ஊக்குவிப்புத் திட்டத்தின் விருது வழங்கும் விழாவில் அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்

.அரச மற்றும் தனியார் வேலைவாய்ப்பு

விசேட தேவையுடையோரின் மேம்பாட்டிற்காக அரசாங்கம் பல கொள்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும், அரச மற்றும் தனியார் வேலைவாய்ப்புத் துறைகள் இரண்டிலும் அவர்களின் உள்ளடக்கத்தை உறுதி செய்வதில் உறுதியாக இருப்பதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.இந்த நிகழ்வில் கிராம அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர்  உபாலி பன்னிலகே மற்றும் பல அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top