கோர விபத்தில் தந்தை பலி - மகள் படுகாயம்!

Editor
0


 புத்தளம் பகுதியில் சம்பவித்த கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் இளம் யுவதி ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வென்னப்புவ புதிய வீதியில் கொரககாஸ் சந்தி பகுதியில் இன்று காலை வேளையில் விபத்து ஏற்பட்டுள்ளது.

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் விபத்து சம்பவித்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.



தந்தை பலி

மோட்டார் சைக்கிளிலில் பயணித்த ஓய்வுபெற்ற கிராம சேவகர் உயிரிழந்த நிலையில், அவரின் மகள் காயமடைந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து பயணித்த இளம் பெண் மற்றும் வேனின் சாரதி ஆகியோர் மாரவில ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top