பொலிஸ் நிலையத்திற்குள் புகுந்து அநாகரீகமாக நடந்து கொண்ட பெண்!

Author
0

 கம்பஹா, நிட்டம்புவ பொலிஸ் நிலையத்திற்குள் அநாகரீகமாக நடந்து கொண்ட பெண் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


கைது செய்யப்பட்ட பெண் கம்பஹா சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகத்தில் பணி புரியும் செவிலியர் என்று நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நபரை தடுத்து வைக்க பொலிஸாருக்கு சட்டப்பூர்வ உரிமை இல்லை என கூறி அவர் அவ்வாறு நடந்துக் கொண்டுள்ளார்.


நீதிமன்றத்தை தவிர்ப்பதற்காக பிடியாணை

கடந்த 23 ஆம் திகதி இரவு 11.00 மணியளவில் நீதிமன்றத்தை தவிர்ப்பதற்காக பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சந்தேக நபர் கைது செய்யப்பட்டதனை தொடர்ந்து இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.




கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படும் வரை நிட்டம்புவ பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.


அந்த நேரத்தில் சந்தேக நபரின் உறவினரான அந்தப் பெண் அவரைப் பார்க்க பொலிஸ் நிலையத்திற்கு வந்தார்.


மேலதிக விசாரணை

பிடியாணை வைத்திருப்பவரை சிறையில் அடைக்க பொலிஸாருக்கு உரிமை இல்லை என்று கூறி, பொலிஸ் நிலையத்திற்குள் அவர் அநாகரீகமாக நடந்து கொண்டுள்ளார்.



மேலும் அதிகாரிகளின் கடமைகளில் இடையூறு விளைவித்ததற்காகவும் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். மேலும் சம்பவம் குறித்து நிட்டம்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top