புல்வெளியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஹெரோயின்; எடுத்துச் செல்ல வந்தவர்கள் க்ஷாக்!

Author
0

 ஈஸி கேஷ் முறையின் மூலம் பணம் செலுத்தப்பட்ட, புல்வெளியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஹெரோயின் பொட்டலத்தை எடுத்துச் செல்ல வந்த இளைஞன் ஒருவன் ஹட்டன் பொலிஸ் பிரிவின் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் நேற்று வியாழக்கிழமை (13) கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹட்டன் பகுதியில் நடைபெற்ற மற்றொரு சோதனையைத் தொடர்ந்து, ஹட்டன் - பொகவந்தலாவை பிரதான வீதியிலுள்ள டிக்கோயா தேயிலை தொழிற்சாலைக்கு அருகில் இருந்த இரண்டு இளைஞர்கள் மீது பொலிஸ் அதிகாரிகள் சந்தேகம் கொண்டனர்.


ரூ. 6,000 செலுத்தி போதைப்பொருள்

இளைஞர்களின் நடத்தை சந்தேகத்துக்குரியதாக இருந்ததால், பொலிஸார் சுற்றுவட்டாரப் பகுதியைச் சோதனை செய்தபோது, பிரதான வீதியின் அருகிலுள்ள புல்வெளியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஹெரோயின் பொட்டலத்தை கண்டுபிடித்தனர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top