அரசின் மொத்த கடன் 29,660.22 பில்லியன் ரூபா!

Editor
0

 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாத இறுதிக்குள் செலுத்த வேண்டிய இலங்கையின் மொத்த அரசுக் கடன் 29,660.22 பில்லியன் ருபா எனத் தெரிவிக்கபப்டுகின்றது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை மாத இறுதியில் செலுத்த வேண்டிய மொத்த அரசுக் கடன் 29,862.51 பில்லியன் ரூபாவாக இருந்த நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் அது 202.29 பில்லியன் ரூபா அளவுக்கு குறைந்துள்ளதாக அறிக்கை குறிப்பிடுகிறது.

அதேபோல், 2025 ஆகஸ்ட் மாதம் வரை செலுத்த வேண்டிய மொத்த உள்நாட்டு கடன் 18,679.49 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளது



ஜூலை மாத இறுதியில் உள்நாட்டு கடன் 18,944.36 பில்லியன் ரூபாவாக இருந்த நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் அது 264.87 பில்லியன் ரூபா அளவுக்கு குறைந்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

மேலும், 2024 ஆம் ஆண்டு முடிவில் இலங்கையின் மொத்த அரசுக் கடன் 28,738.70 பில்லியன் ரூபாவாக இருந்தது.

அதனை ஒப்பிடுகையில், 2025 ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் அரசுக் கடன் மொத்தம் 921.52 பில்லியன் ரூபாவினால் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top