கனடாவில் இடம் பெற்ற கார் விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் சம்பவிடத்தில் உயிரிழந்துள்தாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த துயர சம்பவம் கடந்த சில தினங்களின் முன்பு இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. இந்த விபத்தில் 19 வயதான இளைஞரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கனடாவில் தற்போது குளிர் காலம் ஆரம்பித்துள்ள நிலையில் மக்கள் பாதுகாப்பாக வாகனத்தை செலுத்துமாறு கனேடிய பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்நிலையில் யாழ் இளைஞனின் மரணம் குடுபத்தினரிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
