நாட்டில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக கிடைக்கும் வெளிநாட்டு உதவி மற்றும் நன்கொடைகளை முறையாக நிர்வகிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தால், மிகக் குறுகிய காலத்தில் நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என்று பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையின் பேராசிரியர் வசந்த அதுக்கோரல தெரிவித்துள்ளார்.
நாட்டின் மக்கள் தொகையில் சுமார் பத்து சதவீதத்தினரும் விவசாயம் மற்றும் தொழில்துறை துறைகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நேரத்தில் நாட்டிற்குக் கிடைக்கும் வெளிநாட்டு உதவிகளை முறையாக நிர்வகித்து, புதிய பார்வையின் கீழ் புத்திசாலித்தனமாகச் செயல்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொருளாதாரத்திற்கு கடும் பாதிப்பு
மேலும், பேரிடர் சூழ்நிலை நாட்டின் பொருளாதாரத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. பேரிடர் சூழ்நிலையை நாட்டை இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதற்கான ஒரு ஆசீர்வாதமாக எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
“இந்த ஆண்டு ஐந்து சதவீத பொருளாதார வளர்ச்சி எதிர்பார்க்கப்பட்டது. முதல் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம் 4.8 சதவீதமாகவும், இரண்டாவது காலாண்டில் 4.9 சதவீதமாகவும் இருந்தது. எனினும் பேரிடரினால் பொருளாதாரம் கடுமையான பின்னடைவை சந்திக்க வாய்ப்புள்ளது.


