கோர விபத்தில் தம்பதி மரணம்.. படுகாயங்களுடன் வைத்தியசாலையில் மூவர்!

Editor
0

 கம்பஹா மாவட்டம், கந்தானை பிரதேசத்தில் ஏற்பட்ட வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.

கார் ஒன்றும் லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன்போது காரைச் செலுத்திச் சென்ற 45 வயதுடைய நபரும், காரின் முன் ஆசனத்தில் அமர்ந்து பயணித்த 39 வயதுடைய பெண்ணும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

பொலிஸ் விசாரணை 

மேற்படி இருவரும் தம்பதி என்று பொலிஸ் விசாரணையின் போது தெரியவந்துள்ளது.


மேலும், காரின் பின் ஆசனங்களில் அமர்ந்து பயணித்த மேற்படி தம்பதியரின் உறவினர்கள் மூவர் (ஆண் ஒருவர், இரு பெண்கள்) காயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

விபத்துச் சம்பவம் தொடர்பில் லொறியின் சாரதியைக் கைது செய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top