கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்ட பெண்!

Editor
0

 நாட்டுக்குள் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் பெண் பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


இவர் இன்று (19) அதிகாலை 12.45 மணிக்கு டுபாயிலிருந்து ஃப்ளை டுபாய் FZ-569 விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை  வந்தடைந்துள்ளார்.


இதனையடுத்து "கிரீன் சேனல்" வழியாக கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேற முயன்ற போது விமான நிலைய சுங்க அதிகாரிகளால் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிகரெட்டுகள் கைப்பற்றல்

இதன்போது இவரிடமிருந்து சுமார் 354,000 ரூபாய் பெறுமதியான சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.


இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பண்டாரவளை பகுதியைச் சேர்ந்த 49 வயதுடையவர் எனவும் தெரியவந்துள்ளது.


இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top