நாட்டில் ரயில் பருவச் சீட்டுகளை பயன்படுத்தி இலங்கைப் போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளிலும் பயணிக்கலாம் என இலங்கை போக்குவரத்து சபை தலைவரால் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையின் காரணமாக மக்களின் போக்குவரத்து தொடர்பில் கவனம் செலுத்தியே இந் நடவடிக்கையை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
