தித்வா புயல் இலங்கையில் மோசமான பேரழிவை ஏற்படு்த்தி சென்றுள்ள நிலையில் , வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலர் உயிரிழந்ததுடன் , நூற்றுக்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.
இந்நிலையில் இலங்கைக்கு உடனயா வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள இந்தியாவிலிருந்து தேசிய பேரிடர் மீட்பு படை (என்டிஆர்எப்) .
தைரியமான கரங்களில் நம்பிக்கை
வெள்ளத்தில் சிக்கி உயிருக்கு போராடிய ஆயிரக்கணக்கா னோரை இந்திய படை மீட்ட நிலையில், MyGovIndia இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதில், “தைரியமான கரங்களில் நம்பிக்கை! இலங்கையில் வெள்ள நிவாரண நடவடிக்கையின்போது வீட்டில் தண்ணீரில் தத்தளித்த பச்சிளங் குழந்தையை இந்திய என்டிஆர்எப் வீரர் ஒருவர் கையில் ஏந்தி பத்திரமாக மீட்டு காப்பாற்றினார்.
நெருக்கடி நிலையின்போது, இந்தியாவின் தூய மனித நேயம், தைரியம், இரக்கத்தை படம்பிடித்து காட்டும் ஒரு உன்னத தருணம் இது" என்று பதிவிடப்பட்டுள்ளது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த இணையவாசிகள், இந்திய மீப்பு பணி குழுவினருக்கு பாராட்டுக்களை பதிவிட்டு வருகின்றனர்.
