அட்லாண்டிக் பெருங்கடலில் அமெரிக்கப் படைகளால் துரத்தப்படுவதாக கூறப்படும் எண்ணெய் கப்பல் ஒன்றை பாதுகாக்க ரஷ்யா கடற்படை கப்பல்களை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செவ்வாயன்று குறித்த ரஷ்ய கப்பல் ஸ்கொட்லாந்துக்கும் ஐஸ்லாந்துக்கும் இடையில் இருப்பதாகக் கருதப்பட்டது.
எண்ணெய் கப்பல்கள்
முன்னதாக, வெனிசுலாவிற்குள் நுழைந்து, அங்கிருந்து வெளியேறும் தடைசெய்யப்பட்ட எண்ணெய் கப்பல்களை "முற்றுகையிடுமாறு, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த மாதம் கூறியிருந்தார்.
இந்த நிலையில், கடந்த மாதம் கரீபியனில் பெல்லா 1 என்ற கப்பல், அமெரிக்கத் தடைகளை மீறி, வெனிசுலாவுக்கு ஈரானிய எண்ணெயை எடுத்துச் சென்றதாக குற்றம் சாட்டப்பட்டு, அந்தக் கப்பலைக் கைப்பற்ற உத்தரவிடப்பட்டது.
எனினும்,அது வியத்தகு முறையில் அந்த கப்பல் தமது பாதையை மாற்றியது - அதே போல் அதன் பெயரை மரினேரா என்றும் மாற்றியது. இந்த சூழ்நிலையில், கப்பலைச் சுற்றியுள்ள நிலைமையை "கவலையுடன் கண்காணித்து வருவதாக" ரஷ்யா கூறுகிறது.
