இலங்கையின் 78வது சுதந்திர தினம் இன்று புதன்கிழமை (04) கொண்டாடப்பட்டுவரும் நிலையில் யாழ். பல்கலைக்கழகத்தில் கறுப்புக்கொடி ஏற்றப்பட்டது.
ஸ்ரீ லங்கா அரசின் 78 வது சுதந்திர தினம் தமிழ் மக்களின் கரிநாள் என்பதை அரசாங்கத்திற்கு கூறும் முகமாக இவ்வாறு கறுப்புக்கொடி ஏற்றப்பட்டது.

அதேவேளை இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஸ்டிக்குமாறு, யாழ் பல்கலைகழக மாணவர்கள் ஒன்றியம் அறிவித்திருந்த நிலையில், இன்றைய தினம் யாழ். பல்கலைக்கழகத்தில் கறுப்புக்கொடி ஏற்றப்பட்டுள்ளது.