லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் வைத்தியசாலை உட்பட பல வைத்தியசாலைகளில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் சில மருந்துகள் தொடர்ந்து விநியோகிக்கப்படாததால் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக வைத்திய மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர்களின் கூட்டணி தெரிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் பாரிய சிக்கல்வலிப்பு நோய்களுக்கு வழங்கப்படும் Ethosu ximide, குழந்தைகளுக்கான வலிப்பு மற்றும் சிறுநீரக பாதிப்பு உட்பட பச்சிளம் குழந்தைகளுக்கான விசேட வைத்திய நிபுணர்களின் கிளினிக்குகளுக்கு வழங்கப்படும் பல வகை மருந்துகள் தொடர்ந்து வழங்க முடியாததால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக கூட்டணியின் தலைவர் வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.
தனியார் மருந்தகங்களில் இருந்து இந்த மருந்துகளை வாங்குவதற்கு செலவிடப்படும் பாரிய தொகை குறித்து சுகாதார அமைச்சும் அரசாங்கமும் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூட்டணி கூறுகிறது.வலிப்பு ஏற்படுவதால் குழந்தைகளுக்கு வழங்கப்படும் எத்தோசுக் சிமைடு Ethosu ximide மருந்தை ஒரு மாத பயன்பாட்டிற்கு தனியார் மருந்தகங்களில் இருந்து வாங்க குறைந்தது ரூ. 30,000 செலவிட வேண்டியுள்ளது.
இவ்வாறான நிலையில் வறுமையின் பிடியில் வாழும் பொற்றோர்களின் நிலைமை வார்த்தைகளில் சொல்ல முடியாத அவல நிலைமை என்று சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

