குவைத்தில் அமைந்துள்ள இராணுவத் தளத்தின் வான் பாதுகாப்பு முறைமைகளை (Air Defenses) மீறி, ஈரானிய ஆளில்லா விமானம் (ட்ரோன்) ஒன்று எவ்வாறு உள்ளே ஊடுருவியது என்பது குறித்து அமெரிக்கப் பாதுகாப்புத் தலைமையகமான 'பென்டகன்' தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
அமெரிக்காவின் அதிநவீன வான் பாதுகாப்பு கட்டமைப்புகளைத் தாண்டி இந்த ஈரானிய ஊடுருவல் எவ்வாறு சாத்தியமானது என்பது குறித்தும், பாதுகாப்பு வலையமைப்பில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் குறைபாடுகள் குறித்தும் அமெரிக்க இராணுவத் தரப்பு மிகவும் தீவிரமாக ஆராய்ந்து வருவதாக குறித்த செய்தியில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

