உலகளாவிய நிதி நிறுவனங்களுக்கு ஈரானின் மாபெரும் அச்சுறுத்தல்: "அமெரிக்கப் பத்திரங்களை வாங்கினால் உங்கள் மீது தாக்குதல்!"
மத்திய கிழக்கில் இராணுவ ரீதியாகப் போரிட்டு வரும் ஈரான், தற்போது தனது தாக்குதல் இலக்குகளை உலகளாவிய நிதி மற்றும் பொருளாதாரக் கட்டமைப்புகளை (financial entities) நோக்கித் திருப்பியுள்ளது. அமெரிக்க இராணுவ வரவுசெலவுத் திட்டத்திற்கு (US military budget) நிதியளிக்கும் உலகளாவிய நிறுவனங்களை இலக்கு வைத்து ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது-பாகர் காலிபாஃப் பகிரங்கமான இறுதி எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளார்.
"இரத்தம் தோய்ந்த பத்திரங்கள்":
தனது உத்தியோகபூர்வ 'எக்ஸ்' (X) சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ள சபாநாயகர் காலிபாஃப், "அமெரிக்க இராணுவ வரவுசெலவுத் திட்டத்திற்கு நிதியளிக்கும் நிதி நிறுவனங்கள் எமது நியாயமான இலக்குகளாகும் (legitimate targets)" எனத் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். மேலும் அவர் குறிப்பிடுகையில், "அமெரிக்கத் திறைசேரிப் பத்திரங்கள் (US treasury bonds) ஈரானியர்களின் இரத்தத்தில் தோய்ந்துள்ளன. அவற்றை நீங்கள் கொள்வனவு செய்தால், உங்கள் தலைமைக் காரியாலயம் மற்றும் சொத்துக்கள் (HQ and assets) மீதான தாக்குதலையும் நீங்கள் விலைக்கு வாங்குகிறீர்கள் என்று அர்த்தம்" எனக் கடுமையாக எச்சரித்துள்ளார்.கண்காணிக்கப்படும் முதலீடுகள்:
உலகளாவிய வங்கிகள் மற்றும் முதலீட்டு நிறுவனங்களுக்கு நேரடி அச்சுறுத்தலை விடுக்கும் வகையில், "நாங்கள் உங்களது முதலீட்டுப் பட்டியல்களைக் (portfolios) கண்காணிக்கிறோம். இது உங்களுக்கான இறுதி அறிவிப்பாகும் (final notice)" என அவர் விடுத்துள்ள செய்தி சர்வதேசப் பொருளாதார மட்டத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஈரானின் மின்னுற்பத்தி நிலையங்களை அழிப்பதாக விடுத்த அச்சுறுத்தலுக்குப் பதிலடியாக, பிராந்திய உட்கட்டமைப்புகளை அழிப்போம் என ஈரான் ஏற்கனவே எச்சரித்திருந்த நிலையில், தற்போது உலகளாவிய நிதி நிறுவனங்களையும் போரின் இலக்குகளாக ஈரான் அறிவித்துள்ளமையானது, இந்தப் போரை ஒரு மாபெரும் உலகளாவியப் பொருளாதார நெருக்கடியாக மாற்றும் அபாயத்தை உணர்த்துகிறது.
#Tubetamil24X7 #Tubetamil #Iran #USTreasuryBonds #GlobalEconomy #IranWar2026 #BreakingNewsTamil #Jaffna #WorldWar3 #TamilNewsToday
