ஈரானுக்கு எதிரான போருக்கு பின்னர் எண்ணெய் விலை குறையும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா கடந்த 28 ஆம் திகதி ஈரானின் அணுசக்தி மையங்கள், அணுசக்தி உள்கட்டமைப்புகள் மற்றும் இராணுவ தளங்கள் என பல்வேறு பகுதிகளைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியது.
எண்ணெய் விலை
இந்த தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் மீதும் மத்திய கிழக்கில் அமெரிக்க படைத்தளங்கள் அமைந்துள்ள நாடுகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருவதால், மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
