இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா, ஈரானில் நடத்திய தாக்குதலில் ஈரானின் அதி உச்ச தலைவரின் மகள் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஈரானின் ஊடகம் ஒன்று இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.
குறித்த தாக்குதலில் ஈரானின் அதி உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மகள், மருமகன் மற்றும் பேரப்பிள்ளை ஆகியோர் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்தப் போரில் காமேனியும் கொல்லப்பட்டதாக ட்ரம்ப் மற்றும் இஸ்ரேலிய அதிகாரிகள் உரிமை கோரியதைத் தொடர்ந்து இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.முன்னதாக, ஈரானிய அதிகாரிகள் இத்தகைய தகவல்களை உளவியல் போர் எனக் கூறி மறுப்பு வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.ஈரான் மீது தாக்குதல்: உச்ச தலைவரின் குடும்பத்தினர் உயிரிழப்பு குறித்த தகவல் !!!
மார்ச் 01, 2026
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க
