குவைத்தில் உள்ள அமெரிக்க தூதரகப் பகுதியில் தாக்குதல்
நடத்தப்பட்டதற்கான அறிகுறிகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குவைத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்திலிருந்து அல்லது அதற்கு அருகில் இருந்து புகை எழுவதைக் காண முடிந்தது என்று சர்வதேச செய்தி நிறுவனங்கள் உறுதிபடுத்தியுள்ளன.
குறித்த பகுதிகளில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள்
காணப்பட்டதாகவும் செய்தி நிறுவனங்கள் கூறுகின்றன.
கட்டிடம் அருகே புகை வந்ததை அடுத்து, தூதரகத்திற்கு யாரும் வர வேண்டாம் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.
