ஈரானின் மின்நிலையங்கள் தாக்கப்பட்டால் ஹார்முஸ் ஜலசந்தி முற்றுமுழுதாக மூடப்படும்: அமெரிக்கா, இஸ்ரேலுக்கு IRGC பகிரங்க எச்சரிக்கை!
தமது அணு உலைகள் மற்றும் மின்னுற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தினால் பாரிய விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என ஈரான் தொடர்ச்சியாக அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுத்து வந்த நிலையில், ஈரானியப் புரட்சிகரக் காவற்படை (IRGC) தற்போது மிகக் கடுமையான உத்தியோகபூர்வ அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தி முற்றாக மூடப்படும்:
ஈரானின் மின்னுற்பத்தி நிலையங்களை இலக்கு வைத்து அமெரிக்காவோ அல்லது இஸ்ரேலோ தாக்குதல்களை முன்னெடுத்தால், உலகளாவிய எண்ணெய் விநியோகப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) "முற்றுமுழுதாக மூடப்படும்" (completely closed) என IRGC திட்டவட்டமாக அறிவித்துள்ளது. அத்துடன், அழிக்கப்பட்ட தமது மின்நிலையங்கள் மீண்டும் முழுமையாகக் கட்டியெழுப்பப்படும் வரையில் இந்த நீர்வழிப்பாதை ஒருபோதும் திறக்கப்பட மாட்டாது எனவும் ஈரான் தனது பிடிவாதமான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.இஸ்ரேல் மற்றும் அமெரிக்க நிறுவனங்களுக்கு இலக்கு:
மேலும், இந்த அறிக்கையில் இஸ்ரேலுக்கான நேரடி அச்சுறுத்தல்களும் விடுக்கப்பட்டுள்ளன. ஈரானிய உட்கட்டமைப்புகள் தாக்கப்பட்டால், அதற்குப் பதிலடியாக இஸ்ரேலின் மின்னுற்பத்தி நிலையங்கள், எரிசக்தி உட்கட்டமைப்புகள் மற்றும் தகவல் தொடர்புத் தொழில்நுட்ப மையங்கள் (information and communication technology) மீது "பரந்த அளவில் தாக்குதல்கள்" (extensively targeted) தொடுக்கப்படும் என IRGC எச்சரித்துள்ளது.
அதுமாத்திரமன்றி, மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் இயங்கி வரும் அமெரிக்கப் பங்குதாரர்களைக் கொண்ட (American shareholders) ஒத்த எரிசக்தி மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களும் "முற்றுமுழுதாக அழிக்கப்படும்" (completely destroyed) எனவும் ஈரான் தனது எல்லையை விரிவுபடுத்தியுள்ளது. ஈரானின் இந்த அதிரடியான அறிவிப்பானது, போரை ஒரு பிராந்தியப் பொருளாதார அழிவாக மாற்றும் அபாயத்தைத் தோற்றுவித்துள்ளது.
#Tubetamil24X7 #Tubetamil #IRGC #StraitOfHormuz #IranWar2026 #BreakingNewsTamil #Jaffna #WorldWar3 #TamilNewsToday
