இலங்கையில் மாணவியை படுகொலை செய்த வெளிநாட்டவர் - தலைமறைவான நிலையில் கைது.

Author
0

 கொழும்பின் புறநகர் பகுதியான களுபோவில பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், தனது முன்னாள் காதலியை கத்தியால் குத்திக் கொலை செய்த சீன நாட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் காதலியை கொலை செய்த நிலையில் அவரது புதிய காதலரையும் படுகாயப்படுத்திய சீன இளைஞன் தலைமறைவாகியிருந்த நிலையில் 14 நாட்களின் பின்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

26 வயதுடைய சந்தேக நபர், கொழும்பு தர்மபால மாவத்தையில் உள்ள கட்டடம் ஒன்றின் 19வது மாடியில் ஒளிந்திருந்தபோது, குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

தலைமறைவான நிலையில் கைது


இதன்போது அவரிடமிருந்து 2200 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளது.



உயிரிழந்தவர் மொறட்டுவை பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு பயின்று வந்த 29 வயதுடைய லியு யி ஹான் என்ற சீன மாணவியாகும்.

சந்தேக நபர் ஒரு பிரபல சுற்றுலா நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையே நீண்டகாலமாக இருந்த காதல் உறவு முறிந்துள்ளது.

இந்த நிலையில், மாணவி கொழும்பு துறைமுக நகரத்தில் பணியாற்றும் மற்றொரு சீன இளைஞருடன் பழகி வந்துள்ளார்.

சீன இளைஞர்

கடந்த மாதம் 23ஆம் திகதி, களுபோவில பீரிஸ் அவென்யூவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த தனது பொருட்களை எடுத்துச் செல்ல மாணவி தனது புதிய காதலருடன் வந்துள்ளார்.



இதன்போது அங்கு மறைந்திருந்த முன்னாள் காதலன், கூர்மையான ஆயுதத்தால் மாணவியைக் குத்திக் கொலை செய்ததோடு, அதனைத் தடுக்க வந்த புதிய காதலரையும் படுகாயப்படுத்திவிட்டுத் தப்பியோடியுள்ளார்.

இந்தத் தாக்குதலில் மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த மற்றைய சீன இளைஞர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் தற்போது மேலதிக விசாரணைகளுக்காக கொஹுவல பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.






















கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top