த.வெ.க தலைவர் விஜய்க்கு அனுமதி... உதயநிதிக்கு அனுமதி மறுப்பு; தேர்தல் ஆணையம் அதிரடி..

Author
0

   கடலூரில் பரப்பரை செய்ய தவெக தலைவர் விஜய்க்கு அனுமதி வழங்கிய தேர்தல் ஆணையம், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு கடலூரில் பரப்புரை மேற்கொள்ள அனுமைதியை மறுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

வரும் 23 ஆம் திகதி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அனைத்து அரசியல் தலைவர்களும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.


முதலில் அனுமதி கேட்டவர் என்கிற அடிப்படையில் விஜய்க்கு   அனுமதி

முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் என எல்லாருமே பிரச்சாரத்தில் படு பிஸியாக இருக்கிறார்கள்.

தவெக தலைவர் விஜய் தான் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்கினார்.. அதன்பின் திருச்சியில் , திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் செய்தார்.

இன்று அவர் சிவகங்கை மாவட்டத்தில் தவெக வேட்பாளருக்காக வாக்கு சேகரிக்க செல்கிறார். அங்கு காரைக்குடி உள்ளிட்ட பல இடங்களிலும் அவர் பிரச்சாரம் செய்கிறார். அதோடு, நாளை விஜய் கடலூரில் பரப்பரை செய்யவிருக்கிறார்.

இதற்கு அவருக்கு அனுமதியும் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதேநேரம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் நாளை கடலூரில் பிரச்சாரம் செய்ய அனுமதி கேட்டிருந்தார்.

ஆனால் முதலில் அனுமதி கேட்டவர் என்கிற அடிப்படையில் விஜய்க்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கிவிட்டு உதயநிதிக்கு அனுமதி மறுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன...







கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top