நாட்டின் சில பகுதிகளுக்கு பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று (01) நண்பகல் 12.00 மணிக்கு விடுக்கப்பட்ட இந்த எச்சரிக்கை, இன்று இரவு 11.30 மணி வரை செல்லுபடியாகும் என அறிவித்துள்ளது.
பலத்த காற்றும் வீசக்கூடும்
இதன்படி, பிற்பகல் 1.00 மணிக்கு மேல், சபரகமுவ, மத்திய, ஊவ மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், குருநாகல் மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் சில இடங்களில் பலத்த மின்னலுடன் கூடிய இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
