தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ இயக்கத்தின் தலைவர் தோழர் சிறீசபாரத்தினம் அவர்களின் 40வது நினைவஞ்சலி நிகழ்வு இன்று 5ம் திகதி மாலை 4 மணிக்கு அன்னார் புலிகள் இயக்கத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்ட கோண்டாவில் கிழக்கு அன்னங்கை தோட்ட வெளியில் நினைவேந்தல் குழு தலைவர் எஸ்.செந்தூரன் தலைமையில் அனுட்டிக்கப்பட்டது.
இவ் அஞ்சலி நிகழ்வில் ரெலோ இயக்கத்தின் முன்னாள் போராளிகள் பொதுமக்கள் மற்றும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம் மற்றும் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்





