கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிங்கப்பிட்டிய பகுதியில், பலா மரம் ஒன்றிலிருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று முன்தினம் குறித்த நபர் தனது வீட்டின் முன்னால் இருந்த பலா மரத்தில் பலாப்பழம் பறிப்பதற்காக ஏறியுள்ளார்.
பொலிஸார் விசாரணை
அப்போது எதிர்பாராத விதமாக மரத்திலிருந்து தவறி விழுந்து அவர் பலத்த காயமடைந்துள்ளார்.
உடனடியாகக் கம்பளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் சிங்கப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் கம்பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
