மே 6: "எங்கள் இலக்கு அமெரிக்கா மட்டுமே!" 

"ஐக்கிய அரபு அமீரகத்தின் குற்றச்சாட்டுக்குப் பதிலடி! - தேசியப் பாதுகாப்பை உறுதி செய்ய எந்த நடவடிக்கையும் எடுப்போம் என ஈரான் எச்சரிக்கை!"
ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை ஈரான் முற்றிலுமாக நிராகரித்துள்ளதுடன், தங்கள் இலக்கு அமெரிக்கா மட்டுமே என அதிரடியாக அறிவித்துள்ளது! 


தங்கள் ராணுவத்தின் நடவடிக்கைகள் மற்றும் தாக்குதல்கள் அனைத்தும் "முழுக்க முழுக்க" அமெரிக்கப் படைகளை மட்டுமே குறிவைத்து நடத்தப்பட்டவை என்று ஈரான் அரசு பகிரங்கமாகத் தெளிவுபடுத்தியுள்ளது.
தங்களின் சொந்த நலன்கள் மற்றும் தேசியப் பாதுகாப்பைப் பாதுகாப்பதற்குத் தேவையான மற்றும் பொருத்தமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதில் ஈரான் ஒருபோதும் "எவ்விதத் தயக்கமும் காட்டாது" என ஈரானிய வெளியுறவுத்துறை தனது அறிக்கையில் மிகக் கடுமையாக எச்சரித்துள்ளது.
