உயர் நீதிமன்ற நியமனங்களை விரைவுபடுத்துமாறு ஜனாதிபதியிடம் சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை!

Author
0
நாட்டின் நீதித்துறை நடவடிக்கைகள் தாமதமின்றி முன்னெடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தி, உயர் நீதிமன்றங்களுக்கான நீதிபதிகள் நியமனங்களை உடனடியாக விரைவுபடுத்துமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
நீதிபதிகள் பற்றாக்குறை காரணமாக வழக்குகள் நீண்டகாலம் நிலுவையில் உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள சங்கம், நீதிமன்றங்களின் செயல்திறனை மேம்படுத்துவதற்கும் பொதுமக்கள் விரைவான நீதியைப் பெறுவதற்கும் காலியாக உள்ள பதவிகள் உடனடியாக நிரப்பப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
மேலும், நீதித்துறையின் சுயாதீனம், செயல்திறன் மற்றும் நீதியை நிலைநிறுத்தும் நோக்கில், நியமன நடவடிக்கைகள் தாமதமின்றி முன்னெடுக்கப்படுவது அவசியம் என்றும் சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top