
வவுனியா, உக்குளாங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் ஆறாம் திருவிழாவான மாம்பழத் திருவிழா நேற்று (24) நடைபெற்றது.

இதன்போது விநாயகருக்கு படைக்கப்பட்ட மாம்பழம் ஒன்று ஆலய வளர்ச்சி நிதிக்காக ஏலத்தில் விடப்பட்டது.

ஆரம்பத்தில் ரூ.10,000 என ஏலம் தொடங்கிய நிலையில், சில நொடிகளில் ரூ.1 இலட்சத்தை எட்டியது. பின்னர் படிப்படியாக அதிகரித்து, சில நிமிடங்களில் ரூ.3 இலட்சத்துக்கு இறுதி ஏலம் முடிவடைந்தது.

ஏலத்தின் மூலம் கிடைத்த ரூ.3 இலட்சம் தொகை ஆலய வளர்ச்சிப் பணிகளுக்காக பயன்படுத்தப்படவுள்ளது.

மேலும், குறித்த பெண் ஒருவர் தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாகவும் இந்த மாம்பழத்தை ஏலத்தில் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பக்தியும் நம்பிக்கையும் இணைந்த இந்த வித்தியாசமான ஏலம் சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றுள்ளது!