பொலிஸ் அதிகாரம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் பகிரங்க விவாதத்தை முன்னெடுத்து சகலரும் கூட்டாக ஒரு தீர்மானத்துக்கு வரவேண்டும் என அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தில் உள்ளது போன்று ஒவ்வொரு மாகாணங்களுக்கும் பொலிஸ் அதிகாரத்தை பகிரும்போது அதனால் ஏற்படும் பின்விளைவுகள் பாரதூரமானதாக இருக்கும்.
இந்த விடயத்தில் தெற்கு மக்கள் உள்ளிட்ட சகலரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நீதியான தீர்வொன்றை பெற்றுக்கொடுப்பதே எங்களின் எதிர்பார்ப்பாகும் என தெரிவித்துள்ளார்.