மத்திய அமைச்சர் தேசியக்கொடி ஏற்றியதும் மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுதந்திர தினம்
நாடு முழுவதும் நேற்று 77வது சுதந்திர தின விழா கொண்டாடினோம். பல்வேறு பகுதிகளில் மக்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் தேசியக்கொடி ஏற்றி சுதந்திர தினத்தை கொண்டாடி வந்தனர்.
அச்சமயத்தில் நேற்று மத்திய பிரதேச மாநிலம் ரைசென் மாவட்டத்தில் சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை மந்திரி பிரபுராம் சவுத்ரி பங்கேற்றார். அப்பொழுது இவர் தேசியக்கொடி ஏற்றினார், பின்னர் மேடையில் சென்று சிறப்புரை ஆற்றினார்.
மயங்கிய அமைச்சர்
இந்நிலையில், அவர் திடீரென நிலை தடுமாறி கீழே மயங்கி விழுந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர், தற்பொழுது அவரது உடல் சீராக உள்ளது.
மேலும், இவர் ரத்த அழுத்தம் காரணமாக மயங்கி விழுந்ததாகவும் தற்பொழுது இவரது உடை நலமாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.