பழங்கால தங்க புத்தர் சிலையை விற்க முயன்ற இருவர் அதிரடிக் கைது..!

keerthi
0

 


பழங்கால பெறுமதி வாய்ந்ததாக கருதப்படும் தங்க புத்தர் சிலையை 13,000,000 ரூபாய்க்கு விற்க முயன்ற இருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.

இச் சந்தேகநபர்கள் இருவருடன் இணைந்து விற்பனை செய்ய முயன்ற தங்க புத்தர் சிலையையும் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

அத்தோடு பொலிஸ் விசேட அதிரடிப்படையின் முல்லைத்தீவு முகாமின் அதிகாரிகள் குழு மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் அடங்கிய குழுவினர் புத்தர் சிலையுடன் சந்தேகநபர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர்.

வவுனியா பிரதேசத்தில் எரிபொருள் நிரப்பும் நிலையத்தின் முகாமையாளராக கடமையாற்றும் நபர் மற்றும் வவுனியா பாவக்களம் பிரதேசத்தை சேர்ந்த ஒருவருமே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top