இலங்கையில் அரச சார்பற்ற பல்கலைக்கழகங்கள் - ஜனாதிபதி ரணில்

keerthi
0

 




அரச சார்பற்ற பல்கலைக்கழகங்களை ஒழுங்குபடுத்துவதற்கான வலுவான சட்டங்களை இயற்றிய பின்னர், இலங்கையில் அத்தகைய பல்கலைக்கழகங்களை நிறுவுவதற்கு அனுமதிக்கப்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.


2024ஆம் ஆண்டுக்கான பாதீடு இன்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.


நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி இதனை நாடாளுமன்றில் சமர்ப்பித்தார்.


இதன்போதே, அவர் இதனை தெரிவித்துள்ளார்.பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, தொழில் கல்வி நிர்வாகத்தை ஒன்றிணைத்து, தேசிய உயர்க்கல்வி ஆணைக்குழுவொன்று ஸ்தாபிக்கப்படும்.


சர்வதேச கல்வி நிறுவனங்கள், தனியார் பல்கலைக்கழகங்களை, ஒழுங்குப்படுத்தல் விதிகளுக்கு அமைய, இலங்கையில் நிறுவ நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.


புதிய யுகத்திற்கு ஏற்றவாறு அரச பல்கலைக்கழகங்கள் அபிவிருத்தி செய்யப்படும்.மேலும் இந்த வேலைத்திட்டம் பேராதனை பல்கலைக்கழகத்தில் இருந்து ஆரம்பிக்கப்படும்.


இதற்காக அடுத்த வருடத்தில் 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும்.எனினும் நான்கு புதிய பல்கலைக்கழகங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


எதிர்காலத்தில் மாகாண சபைகள் ஊடாக பல்கலைக்கழகங்களை ஸ்தாபிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.


அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கையை இரு மடங்காக அல்லது மூன்று மடங்காக உயர்த்துவது இலக்காக கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top