திருகோணமலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய சிவாலய இடிபாடுகள்

keerthi
0

 


திருகோணமலையில் இதுவரை கண்டுபிடிக்கப்படாத புதிய சிவாலய இடிபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மருத்துவர் அருமைநாதன் சதீஸ்குமார் மற்றும் அவரது நண்பர்களின் உதவியுடன் இந்த இடிபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  

வவுளாமடு என்ற இடத்தில் அடர்ந்த காட்டின் நடுவில் சிவன் கோயில் ஒன்றின் எச்சங்கள் இடிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அத்தோடு, இரண்டு சிவலிங்கங்கள், கருங்கற் பொழிவுகள், பாரிய கருங்கற்றூண்கள், கருங்கல் மேடை மற்றும் தூண்தாங்கு கற்கள் என்பனவும் ஆங்காங்கே காணப்பட்டுள்ளன.

  இதனை   தொடர்ந்து, இக்கோயிலை சுற்றி மக்கள் குடியிருப்புகள் இருந்ததற்கான அடையாளங்கள் பெருமளவில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றன.



கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top