தனிமையில் வசித்து வரும் மூதாட்டி ஒருவரின் வீட்டுக்கு பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவமொன்று யாழ்ப்பாணத்தில் பதிவாகியுள்ளது.
கரவெட்டி விக்னேஸ்வரா வீதியில் உள்ள குறித்த மூதாட்டியின் வீட்டுக்கு சென்ற கும்பல் ஒன்று பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் நடாத்தி விட்டு தப்பி சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் பதிவுசெய்துள்ள முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸாரால் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.