இலங்கையில் வேகமாக பரவும் நோய் குறித்து மக்களுக்கு எச்சரிக்கை

keerthi
0

 


இலங்கையில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதாக சுவாச நோய் மருத்துவர் ஆஷா சமரநாயக்க தெரிவித்துள்ளார்.

இருமல் மற்றும் சளி டெங்குவின் அறிகுறியாக இருக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருமல் மற்றும் சளியுடன் காய்ச்சலும் இருந்தால் இரத்த பரிசோதனை செய்து கொள்ளுமாறும் வைத்தியர் அறிவுறுத்தியுள்ளார்.

இருமல் மற்றும் சளியுடன் காய்ச்சல் இருந்தாலும் இது பொதுவான வைரஸ் காய்ச்சல் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் டெங்கு வைரஸ் தொற்றிய பின்னரும் இந்த அறிகுறிகள் தோன்றக்கூடும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடுமையான காய்ச்சல் மற்றும் மூட்டு வலி ஆகியவை டெங்குவின் பொதுவான அறிகுறிகளாக இருந்தாலும், இருமல் மற்றும் சளி ஆகியவை புதிய அறிகுறிகளல்ல என அவர் தெரிவித்துள்ளார்.


டெங்கு தவிர, மற்ற வைரஸ் நோய்களும் இந்த நாட்களில் பரவலாக உள்ளன, எனவே மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொள்கிறார்.



கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top