நாளை முதல் நாடளாவிய ரீதியில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்..!!

tubetamil
0

 நாளை முதல் 5 நாட்களுக்கு நாடளாவிய ரீதியில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.


தற்போது நிலவும் மழையுடனான வானிலை காரணமாக, டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது,

வடக்கு, கிழக்கு, மேல், தென், சபரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் இந்த விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top