வீட்டில் கருவை கலைத்து புதைத்த தாய் கைது

keerthi
0

 


தம்புத்தேகம தேக்கவத்த பிரதேசத்தில் இரண்டு பிள்ளைகளின் தாயொருவர்   6மாத  சிசுவை புதைத்துள்ளார்.

சிசு பிறந்து 6 மாதமாக இருக்கும் போது குழந்தையை கலைப்பதற்காக சில மாத்திரைகளை உட்கொண்டதாகவும் சந்தேகமடைந்த பெண் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

மேலும்    இவர் தனது கணவரை பிரிந்து தனது பிள்ளைகளுடன் தனியாக வசித்து வந்ததாகவும், கலதிவுல்வெவ பிரதேசத்தில் உள்ள 44 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதனால் அவர் கர்ப்பமாகி கருவை கலைத்த பின் புதைத்துள்ளது தெரியவந்துள்ளது. சந்தேகநபர் தம்புத்தேகம, தேககாவத்தை பிரதேசத்தில் வசிக்கும் 32 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயாவார்.

கர்ப்பிணிப் பெண்ணுக்கு குழந்தை பிறந்துள்ளதாகவும், ஆனால் அவரது குழந்தை அங்கு இல்லை என அநாமதேய தொலைபேசி அழைப்பை அடுத்து தம்புத்தேகம பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

  அத்தோடு  அந்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது தம்புத்தேகம பொலிஸார் கரு புதைக்கப்பட்ட இடத்தை கண்டுபிடிக்க முடிந்தது.

 இச்   சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் பெண்ணும் அவரது முறைகேடான கணவரும் கைது செய்யப்பட்டு தம்புத்தேகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

சந்தேக நபர் மற்றும் சந்தேக நபர் ஜனவரி 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top