இஸ்ரேலிய தாக்குதலால் காசாவில் கடந்த 24 மணிநேரத்தில் 201 பேர் பலியாகினர்.காசாவின் Bureij-யில் உள்ள புலம்பெயர்ந்தோர் முகாமில், குண்டுவீச்சு தாக்குதலில் குழந்தைகள் உட்பட குறைந்தது 8 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.
எனினும் அதே நேரத்தில் Jabalia முகாம் மீதான மற்றொரு தாக்குதலில் அதிகமானோர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
அத்தோடு, கடந்த 24 மணிநேரத்தில் இஸ்ரேலிய படைகளால் காசாவில் நடத்தப்பட்ட தாக்குதலில் 201 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதோடு 370 பேர் காயமடைந்துள்ளனர்.
இதன்மூலம், 11 வார தாக்குதலில் காசாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 20,258 ஆகவும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 53, 688 ஆகவும் உயர்ந்துள்ளது என பாலஸ்தின சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.