IMF விடயத்தில் அரசியல் தலைவர்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் - ஜனாதிபதி..!!

tubetamil
0

 சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தில் அனைத்து அரசியல் தலைவர்களும் பொறுப்புடன் செயற்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.


கண்டியில் இன்று(17) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இந்த கோரிக்கையை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தை நிராகரிக்கும் அனைவரும் நாட்டை வங்குரோத்து நிலையிலிருந்து மீட்பதற்கான முன்மொழிவுகளை முன்வைக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, பொறுப்புக்களை ஏற்காமல் மக்களை மகிழ்விக்கும் வகையில் கருத்துக்களை வெளியிடும் அரசியலானது நாட்டை மீண்டும் பாதாளத்துக்கு இழுத்துச் செல்லும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top